×

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டிக்கு மே1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

சென்னை: சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டிக்கு மே1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2022ஆம் ஆண்டில் (01.01.2022 முதல் 31.12.2022 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30,000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/- என பரிசுகள் வழங்கப்பெறும்.

1. மரபுக்கவிதை
2. புதுக்கவிதை
3. புதினம்
4. சிறுகதை
5. நாடகம் (உரைநடை , கவிதை)
6. சிறுவ ர் இலக்கியம்
7. திறனாய்வு
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9. பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10. நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11. அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்

12. பயண இலக்கியம்
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16. பொறியியல், தொழில் நுட்பவியல்
17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18. சட்டவியல், அரசியல்
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20. மருந்தியல், உடலியல், நலவியல்
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)

22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
23. கல்வியியல், உளவியல்
24. வேளாண்மையியல், கால்நடையியல்
25. சுற்றுப்புறவியல்
26. கணினியியல்
27. நாட்டுப்புறவியல்
28. வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29. இதழியல், தகவல் தொடர்பு
30. பிற சிறப்பு வெளியீடுகள்
31. விளையாட்டு
32. மகளிர் இலக்கியம்
33. தமிழர் வாழ்வியல்

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கீழ்க்குறிப்பிட்ட முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ இலவசமாகப் (https:tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 30.06.2023 ஆகும். தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008. தொலைபேசி எண்கள். 044 – 28190412, 28190413 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டிக்கு மே1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...